Freelancer / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
பாதைகளின் பெயர்கள் மும்மொழிகளில் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை பொருத்தும் நடவடிக்கையை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டாளைச்சேனை போன்ற பகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், லகுகல பகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் பாதைகளின் பெயர் மும்மொழிகளில் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்கள உயரதிகாரி தெரிவித்தார். R
19 minute ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
03 Feb 2026