2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மோட்டர் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Freelancer   / 2023 மே 22 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 

மட்டக்களப்பு - கொக்குவில், குப்பிளாமடு பிரதேசத்தில் மழைநீர் வழிந்தோடும் வடிகான் பள்ளத்தின் ஊடாக பிரயாணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுள்ளார்.

குப்பிளாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய லோகிதராஜா கோவிந்தராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு 8.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது குப்பிளாமடு வீதியின் குறுக்கே மழைநீர் வழிந்தோடும் பள்ளத்தில் இருந்து  மேலே செல்லும் போது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.

அதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .