Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்
உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வடிகானுக்குள் விழுந்து மோதியதில் மலேசியா செல்லவிருந்த இளைஞன், அந்த இடத்திலேயே பலியாகிய சம்பவம், வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாலக்காடு எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற இத்துயரச் சம்பவத்தில், புதிய காத்தான்குடி 3, கோழிக்காரர் வீதியைச் சேர்ந்த கலீலுர்ரஹ்மான் முஹம்மது ஹரிஸ் (வயது 23) என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மேற்படி இளைஞன். தொழில்வாய்ப்புப் பெற்று இன்று (30) மலேசியா நாட்டுக்குச் செல்லவிருந்த நிலையில், தனது நண்பருடன் சேர்ந்து உன்னிச்சைக் குளத்தைப் பார்வையிட்டு, உல்லாசமாகப் பொழுதைப் போக்குவதற்காக, இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
அவ்வேளையில், வவுணதீவு பாலக்காடு எனும் இடத்தில் வைத்து வீதியால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை முந்திச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளை வேகப்படுத்தியபோது, அது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதி மருங்கிலிருந்த வடிகானுக்குள் மோதி விழுந்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
அவரது நண்பரான காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மத் ஸியாம் (வயது 23) என்ற இளைஞன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி வவுணதீவு பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
49 minute ago
2 hours ago
5 hours ago