Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 13ஆம் திகதியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவந்த மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவைக் காப்பாளர்கள், நாளை(21) முதல் கடமையில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
தங்களின் நிரந்த நியமனத்தை வலியுறுத்தி கடந்த 19ஆம் திகதி மட்டக்களப்பில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தை தாங்கள் முன்னெடுத்துள்ள போதிலும், எதுவித தீர்மானமும் எட்டப்படாத நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு கடமைக்குத் திரும்புவதாக மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவைக் காப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜெயகாந்தன் தெரிவித்தார்.
கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பில் 24 ரயில் கடவைகளில் 72 பேர் கடமையாற்றி வருவதாகவும் மாதத்தில்; 28 நாட்கள் கடமையாற்றினால், 7,000 ரூபாயும் மாதத்தில் 30 நாட்கள் கடமையாற்றினால், 7,500 ரூபாயும் தங்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகின்றன.
தற்காலிக அடிப்படையில் ரயில் கடவைக் காப்பாளர்களாக கடமையாற்றும் தங்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்கி அரசாங்கச் சேவைக்குள் உள்வாங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தங்களின் நிரந்தர நியமனக் கோரிக்கை தொடர்பில் உரிய தரப்பினருக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்று தங்களுக்கு நிரந்த நியமனத்துடன், சம்பள உயர்வு வழங்கி, அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கும் அத்தனை சலுகைகளையும் தமக்கும் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago