Thipaan / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியின் நாவலடிசந்தியில் இன்று (26) பிற்பகல் 02.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரையும்; வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விடுமுறையின் நிமித்தம் கொழும்பில் இருந்து பாசிக்குடாவுக்கு வந்து, மீண்டும் கொழும்பு பயணித்த குடும்ப உறுப்பினர்கள் பயணித்த வேன், சைக்கிளில் வியாபாரத்துக்;காக விறகு ஏற்றி வந்த குடும்பஸ்தர் மீது மோதியதனாலயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில், சைக்கிளில் பயணித்த தேவாலய வீதி முறக்கட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான் வைரமுத்து (வயது 52) என்பவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வேனில் பயணித்தவர்களில் காயமடைந்த ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேனின் சாரதி வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago