2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் 6 பேர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 24 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒரு வயதுக் குழந்தையொன்று உட்பட ஆறு பேர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
வாழைச்சேனையிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகிச்சென்று, வீதியின் வலது புறமாகவுள்ள மதகு ஒன்றினுள் குடைசாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
   
இதில் முச்சக்கரவண்டிச் சாரதியான ச.மகாதேவன் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கே.பரதன், கே.யாழினி, கே.அனுஷ்கன், ஐ.ரஞ்ஜினி மற்றும் பீ.காருனி (வயது 01) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த ஆறு பேரும் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் பீ.காருனி என்ற குழந்தை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X