Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 27 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம்; ஏற்பாடு செய்துள்ள விருது விழா நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கல்லடியிலுள்ள மேற்படி அமைப்பின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு அங்கொடை மனநல வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் எம்.கணேசனின் தலைமையில் நடத்தப்பட்ட கட்டுரை, கவிதைப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப்; பெற்றவர்களுக்கு பணப்பரிசுடன்; விருது வழங்கப்படவுள்ளன.
மேற்படி கற்கை நிலையத்தின் பணிப்பாளர் திருமதி.ரி.பிரான்சிஸ் தலைமையில் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இவ்விழா நடைபெறவுள்ளது.
மட். மாவட்ட வர்த்தக விவசாயக் கைத்தொழில் சம்மேளனப் பணிப்பாளர் நாயகம் வி.ரஞ்சிதமூர்த்தி பிரதம அதிதியாகவும் கத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் சுசிலா பரமகுருநாதன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியாத்தடை இயக்க வைத்திய அதிகாரி திருமதி மேகலா ரவிச்சந்திரன், கோட்டைமுனை மத்திய மருந்தகத்தின் வைத்திய அதிகாரி ரி.கலைச்செல்வி, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அசீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
50 minute ago
58 minute ago
1 hours ago