2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வேலி சேதமாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 18 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கம் பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமான கண்ணகியம்மன் கோவிலுக்கு முன்னாள் உள்ள காணியின் வேலி  சில நபர்களால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவில் வண்ணக்கர்மார்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் கோவில்  தலைவர்  மயில்வாகனம் அரசரட்ணம்  தெரிவித்தார்.

செய்யப்பட முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த இடத்துக்கு வருகை தந்த  மட்டக்களப்பு பொலிஸார்,மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  மற்றும் அமிர்தகழி  கிராம சேவை உத்தியோகத்தர் பார்வையிட்டதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணிகள் சிலரால் கடந்த காலத்தில் அத்துமீறிய வகையில் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக ஆலயத்திற்கு சொந்தமான காணிகளை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஆலய நிர்வாகத்தினை மேற்கொண்டுவருவதாகவும் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் ஆலய  தலைவர்  மயில்வாகனம் அரசரட்ணம்  தெரிவித்தார் .

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X