Suganthini Ratnam / 2016 ஜூன் 14 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா தலைமையிலும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியானது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டட தொகுதியிலிருந்து ஆரம்பமாகி நீதவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலயம் வரை சென்று நிறைவுற்றது.

2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025