Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.நுர்தீன்
டுபாய் நாட்டில் தொழில் புரிந்து ஒரு மாத கால விடுமுறையில் தாய்நாட்டுக்கு வந்த தவராசா தற்பரன் வீதி விபத்தொன்றில் பலியான சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்று ள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி, பிரதேசத்தைச் சேர்ந்த தவராசா தற்பரன் (வயது 41) என்பவரே மரணித்தவராகும்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
தவராசா தற்பரன், ஆயித்தியமலை, ஆறாம்கட்டையிலுள்ள தனது வயலுக்குச் சென்றுவிட்டு மாலை தனது மோட்டார் சைக்கிளில் வவுணதீவு வீதியினூடாக வீட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்டவேளை, உழவு இயந்திரம் சடுதியாகத் திரும்பியதால், அதில் மோதுண்டு வீதி மருங்கிலிருந்த கொங்கிறீட் கட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago