2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; சாரதி கைது

Suganthini Ratnam   / 2017 ஜூலை 09 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி, தியாவட்டவான் பிரதேசத்தில் மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர், சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையைச் சேர்ந்த முஹம்மது அசனார் முஹம்மது அபூபக்கர் (வயது 86) என்பவரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.

சைக்கிளை உருட்டிச் சென்றுகொண்டிருந்த இவரை,  சிறிய வாகனமொன்று மோதியுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தை அடுத்து, குறித்த வாகனச் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X