2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

1,800 கிலோகிராம் கொழுந்தை நிர்வாகம் ஏற்க மறுப்பு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

ஹொரண பிளான்டேஷன், கவரவிலை தோட்ட 200 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று புதன்கிழமை பறித்த, 1800 கிலோகிராம் கொழுந்தை தோட்ட நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது.

200 ஏக்கருக்கு உரித்தான 2பி, 2ஏ (15 எக்டயர்) தேயிலை மலையை, வேறு ஒரு பிரிவுக்கு கொடுக்க தோட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. எனினும் தோட்டத் தொழிலாளர்கள் அதற்கு  எதிர்ப்புத் தெரிவித்தால், நேற்று பறிக்கப்பட்ட 1800 கிலோகிராம் கொழுந்தை தோட்ட நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது.

ஆடு, மாடு வளர்க்கக்கூடாது, முச்சக்கரவண்டி வைத்திருக்க கூடாது, 2 பிள்ளைகளுக்கு மேல் பெற கூடாது என தோட்ட முகாமையாளர் கூறுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .