R.Maheshwary / 2021 ஜூலை 25 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
ஹாலிஎல- லந்தேவல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 21 வயது சந்தேகநபர் ஒருவர் ஹாலி எல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி நோய்வாய்ப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர், சிறுமியை பதுளை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, சிறுமி கர்ப்பம் தரித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 5 மாதங்களான இரட்டைக் குழந்தைகள் சிறுமியின் வயிற்றில் வளர்கின்றமை வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரான இளைஞர்,பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியிருந்தார்.
எனினும் சந்தேகநபரை ஹாலிஎல பொலிஸார் கைதுசெய்து, அவரை பதுளை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில், சந்தேகநபரை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago