2025 மே 12, திங்கட்கிழமை

2 கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

Editorial   / 2023 ஜூன் 27 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றரை கோடி ரூபாவிற்கு இரண்டு கஜமுத்துக்களை விற்பனை செய்ய வாங்குபவர் வரும் வரை கண்டி நகரில் காத்திருந்த 04 சந்தேகநபர்கள், இரண்டு கஜமுத்துக்களுடன்  கண்டி ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி தலைமையக பொலிஸாரின் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கண்டி இரண்டாவது சிங்க ரெஜிமென்ட்டுக்கு முன்பாக சந்தேகநபர்கள் காத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனுராதபுரம், அலவ்வ மற்றும் தலத்துஓயாப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 23-33 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இரண்டு கஜமுத்துக்களும் அனுராதபுரத்தைச் சேர்ந்த சந்தேக நபருடையது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் இன்று (27) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X