2025 மே 13, செவ்வாய்க்கிழமை

20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Freelancer   / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர் வரும் பண்டிகை காலத்​தையொட்டி, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் அதிகூடிய விலைக்கு முட்டைகளை விற்பனைச்செய்த குற்றச்சாட்டின் கீழ் 20 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனநுகர்வோர் சேவை அதிகாரியின் நுவரெலியா மாவட்ட ​காரியாலய பொறுப்பதிகாரி அமில ரத்னாயக்க தெரிவித்தார்.

அவர்களை, நுவரெலியா மற்றும் ஹட்டன் நீதவான் நீதி மன்றங்களில் ஆஜர் படுத்திய போது, குற்றங்களை ஒப்புக்கொண்டமையால் அவர்களிடமிருந்து 5 இலட்சத்து 30 ​ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், முட்டைகளை பதுக்கிவைத்திருந்த வர்த்தகர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2,000 முட்டைகள் நீதி மன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X