2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வடிகாண் இல்லாததால் அசௌகரியம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகஸ்தோட்டை நகரில் உள்ள பல பிரதான வீதிகளில் முறையான வடிகாண்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

கண்டி மாநகர எல்லையில் உள்ள பிரதான நகரமான கட்டுகஸ்தோட்டை நகருக்கு தினம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகின்றனர். கட்டுகஸ்தோட்டை  மடவளை வீதியில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருபவர்கள்  சிலவேளைகளில் வடிகாணில் இடறி விழுவதாகக் கூறுகின்றனர்.

அதேநேரம் பஸ் தரிப்பில் காத்து நிற்பவர்களும் மூடப்படாத காணில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாகவும் பாதிப்படைகின்றனர். அதேநேரம் டெங்கு போன்ற கொடூர நோய்கள் பரவுவதற்கும் இது காரணமாகவுள்ளது. இது விடயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று நகர வாசிகள் கோருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X