2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஜனாதிபதி பதவியேற்பு; அக்குறணை பகுதியில் விஷேட வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 03 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பு வைபவத்தை முன்னிட்டு அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் விஷேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பு வைபவம் நாடு முழுவதிலும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அக்குறணை பிரதேச செயலகப் பிரிவினுள் இதனை முன்னிட்டு ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

இதனை தவிர பிரதேசத்தில் சிரமாதனங்கள், பொது வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வுகள் என பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். நஸீர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .