2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

களுபோவிலவைச் சேர்ந்த யோகராஜன் ரமேஷ்குமார் (வயது 22) என்பவரே விபத்தில் மரணமடைந்தவர் ஆவார்.

கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றும் தெஹிவளையிலிருந்து கொட்டகலைக்குச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்திற்கு உள்ளானது.

விபத்தில் காயமடைந்த இருவரும்; உடனடியாக  கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர்  மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, விபத்தில் மரணமடைந்தவரின் சடலம் கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .