2025 ஜூலை 02, புதன்கிழமை

பெண்ணிடம் ஹெரோயின் பெற்ற நபர் கண்டியில் கைது

Kogilavani   / 2015 ஜூன் 03 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கண்டி, அக்குறணையில் வைத்து நபரொருவரை அலவத்துகொடை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு,மாளிகாவத்தையை சேர்ந்த 30 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், முச்சக்கர வண்டியின் சாரிதியொருவருக்கு துணையாக அவரது வாகனத்தில் கண்டிக்கு செல்லும்போது ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெண்ணிடம் 900 ரூபாய் பணம் கொடுத்து ஹெரோயினை பெற்றுகொண்டதாக விசாரணைகளின் போது அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .