2025 ஜூன் 28, சனிக்கிழமை

2030க்குள் கண்டியை நவீன மயமாக்கும் செயற்றிட்டம்

Sudharshini   / 2015 ஜூன் 20 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி நகரை இந்த வருடத்தில் இருந்து 2030ஆம் ஆண்டுக்குள்  சகல வசதிகளுடன் கூடிய நகரமாக்குவதற்கான செயற்றிட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்கான செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை(19) கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இலங்கையின்  பாரம்பரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் கண்டி நகரத்தை பேணிப் பாதுகாத்தல், நகரை  அபிவிருத்தி செய்தல், உல்லாசப் பயணத் தொழில்துறையை விருத்தி செய்தல், வீடமைப்பு, சுற்றாடல் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் என்பவற்றை மேம்படுத்தல், வர்த்தகம் மற்றும் கைத்தொழில்களை முன்னேற்றல், சுகாதார வசதிகளை மேம்படுத்தல் போன்ற ஆறு விடயங்கள் தொடர்பில் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உயரதிகாரிகளுடனும் துறை ஆர்வலர்களுடனும் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றதுடன்   கண்டியை சூழவுள்ள பிரதேசங்களின்  அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும்; இதன்போது கலந்துரையாடப்பட்டது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கண்டி மாநகர முதல்வர் மஹேந்திர ரத்வத்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ, பணிப்பாளர் நாயகம் நயன மாவில்மட உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .