2025 ஜூன் 28, சனிக்கிழமை

கர்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஜூன் 28 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.பெருமாள்

மஸ்கெலியா, மொக்கா தோட்டத்திலுள்ள கர்ப்பிணிகளுக்கு தோட்ட நிர்வாகம்  4000 ரூபாய் பெறுமதியான பொருட்களை வழங்கி வைத்தது.

இனிவரும் காலங்களில், மகப்பேற்றுக்காக வைத்தியசாலைக்கு செல்லும் கர்ப்பிணிகளுக்கு தோட்ட நிர்வாகம் தேவையான பொருட்களையும் ஊட்டசத்து உணவு பொருட்களையும் வழங்க உள்ளதாக தோட்ட வைத்திய அதிகாரி திருமதி நிமால்கா பெரேரா தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய தோட்ட முகாமையாளர் ரன்சிரி புளத்சிங்கள, 'தோட்டங்களில் தொழில்புரியும் கர்பிணிகள் ஊட்ட சத்தான உணவுகளை உண்பது அரிது.  முதற்கட்டமாக கர்பிணிகளை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஊட்டசத்து உணவுகளை வழங்கவுள்ளோம்' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .