2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பெருந்தோட்டங்களில் குடிநீர், சுகாதார வசதிகளை அபிவிருத்திச் செய்ய உலக வங்கி நிதியுதவி

George   / 2015 ஜூலை 03 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டங்களில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை அபிவிருத்திச் செய்வதற்கு உலக வங்கியானது 14 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

தோட்டப்புறங்களில் குறைந்த தரம்;, குறைந்தளவு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்படுவதே இதன் காரணமாகும். தோட்டத்துறைகளில் சுகாதார சீர்கேடுகள் அதிகளவாக நிகழ்வதாகவும் இச்செயற்றிட்டத்தின் ஊடாக இந்நிலையை கணிசமான  அளவில் கட்டுப்படுத்தலாம் எனவும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி கூறினார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

பெருந்தோட்ட துறையில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நிலையானதொரு சேவை மாதிரியை ஏற்படுத்தும் பொருட்டு நுவரெலியா மாவட்டத்தில் சோதனை நடவடிக்கையாக இச்செயற்றிட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

பெருந்தோட்ட துறையிலும் அதனை அண்டிய கிராமப்புறங்களிலும் குழாய் நீர் விநியோக முறையையும் பாதுகாப்பான சுகாதார வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

இச்செயற்றிட்ட தேர்வானது நீர் மூலாதாரம், நிர்வாகம், பயனாளிகளின் இயக்கம், நடைமுறைப்படுத்தல், பராமரித்தல் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை என்பவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படும். அதேவேளை குடிநீர் வசதியற்ற வீட்டுத்திட்டங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், மகப்பேற்று மருத்துவமனைகள் என்பவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். இதன் கீழ்; 150 சிறிய செயற்றிட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன. 

இதன் மூலம் 90,000 பேர் பயனடையவுள்ளனர். மேலும் 12,000 புதிய மலசலகூடங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இச்செயற்றிட்டத்திற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி நிதியம், தோட்ட தொழிலாளர் வீடமைப்பு கூட்டுறவு சங்கம், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் என்பன ஆதரவளிக்க முன்வந்துள்ளன.

பாதுகாப்பான குடிநீர் நகர்புறங்களி;ல் 88மூ ஆகவும் பெருந்தோட்டப்புறங்களில் 54மூ காணப்படுகின்ற அதேவேளை பாதுகாப்பான சுகாதார வசதிகள் நகர்புறங்களி;ல் 96மூ ஆகவும் பெருந்தோட்டப்புறங்களில் 52மூ காணப்படுகின்றன. இதன் நோக்கம் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவது மட்டுமன்றி இலங்கையின் தரக்கட்டுப்பாட்டிற்கு அமைவாக அதனை 24 மணித்தியாலமும் பெற்றுக்கொடுப்பதாகும். நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் நிர்வாக பங்களிப்பின் கீழ் பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிருத்தி அமைச்சு இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

சரியாக கட்டமைக்கப்பட்ட கட்டணம் அறவிடல் மற்றும் அளவிடல் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் இத்திட்டம் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதையும் பராமரிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த முடியும்.

பொதுவாக பெருந்தோட்ட துறையில் மலசலகூடங்கள் பற்றாக்குறையாக காணப்பபடுவதற்கான முக்கிய காரணம் அவர்களின் பொருளாதார பின்னணியேயாகும். 

இச்செயற்றிட்டத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மலசலகூடமொன்றை அமைப்பதற்கு செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்ட 50,000 ரூபாயில் 70மூ (ரூபாய் 35,000) உதவித்தொகையாகவும் மிகுதி பயனாளிகளின் பங்களிப்பின்  மூலம் ஈடுசெய்யப்படும். 

முறையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமையினால் ஊட்டச்சத்தின்மை, முறையற்ற சுகாதார பழக்கவழக்கங்கள், சிசு மரணங்கள் போன்ற பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 

எனவே, பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுத்து  மேற்கூறப்பட்ட பாதிப்புக்களை இல்லாதொழிப்பதன் மூலம் மிலேனியம் அபிவிருத்தி இலக்கு மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி இலக்கு என்பவற்றில் முன்னேற்றம் காணலாம். இதேவேளை பெருந்தோட்ட சமூகமானது தேசிய மூலதனத்தில் 15மூ பங்களிப்பு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செயலமர்வு கடந்த 30.06.2015 அன்று ஹட்டனில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது இச்செயற்றி;ட்டத்தின் அடிப்படை அம்சங்கள் மற்றும் ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் இதன் சாதக, பாதக நிலைமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் நெவில் பத்மசிறி, அமைச்சின் தி;ட்டமிடல் பணிப்பாளர் அனோஜா முனசிங்க, நீர் மற்றும் சகாதார வசதிகள் செயற்றிட்ட பணிப்பாளர் என்.யு.பி. ரனதுங்கஆகிகோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரின் ஆலோசகர் எம். வாமதேவன், யு.என். ஹெபிடாட் நிறுவனத்தின் செயற்றிட்ட ஆலோசகர் எம்.என்.வலிசுந்தர, பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் நளின் டி சில்வா, தோட்ட முகாமையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துக்கொண்டதாகவும் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, அந்த அறிக்iயில் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .