2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

படு தோல்வி அடையும்

Kogilavani   / 2015 ஜூலை 21 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிரணிகள் அனைத்தும் படுதோல்வி அடையும் என்று கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எரிக் வீரவர்தன தெரிவித்தார்.

ஹாரிஸ்பத்துவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதேல்வி அடையும். ஜனவரி மாதம் 8ஆம் திகதி புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவான பின்னர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்று 100 நாட்கள் வேலைத் திட்டம் ஒன்றை முன்வைத்து மக்களை ஏமாற்றியுள்ளார். மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிரிவதை தடுப்பதற்காக நாங்கள் சிலர் அமைச்சர்,  பிரதி அமைச்சர் பதவிகளை ஏற்றோம். ஆனாலும் எம்மால் கட்சியை ஒன்று சேர்க்க முடியவில்லை. ஆகவேதான், நாங்கள் வகித்து வந்த அமைச்சு பொறுப்புகளிலிருந்து இராஜினாமா செய்தோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .