2026 மே 09, சனிக்கிழமை

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் பலி

Sudharshini   / 2015 ஜூலை 22 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அலவத்துகொடை, கெந்தகொல பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 58 வயதான வை.ஜீ.ஆரியசேன என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை சமரசம் செய்வதற்காக சென்றபோது இவர், தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .