2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சை இல்லாமற் செய்ய முடியாது

Kogilavani   / 2015 ஜூலை 23 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

  -எம்.செல்வராஜா

'ஊவா மாகாணத்தில் இனி யாரும் தமிழ்க் கல்வி அமைச்சை இல்லாமல் செய்ய முடியாது. அதற்கான உத்தரவாத்தை பெற்ற பின்பே ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக நான் பொறுப்பேற்றேன்' என ஐ.தே.க.வின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

'எமது சமூகத்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியிலே தங்கியுள்ளது. எனவே, எமது மக்கள் தொலைக்நோக்குப் பார்வையுடன் சிந்தித்துச் செயற் படவேண்டியது காலத்தின் அவசியம்' என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,

'பதுளை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்படுமேயானால், அது ஐ.தே.க.வின் மூலமே சாத்தியமாகும். தனித்துவம் பேசும் வேட்பாளர்களினாலோ, வேறு எந்தவொரு அரசியல் கட்சி வேட்பாளர்களினாலோ தமிழர் பிரதிநிதித்துவங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. இதனை எமது மக்கள் நன்குணர்ந்துள்ளனர்' என்றார்.  

'எமது மக்களுக்கு ஐ.தே.க மீது அளப்பறிய மோகம் இருந்து வருவதை நான் உணர்வேன். அம்மக்களின் விருப்புக்கமைய  ஊவா மாகாண சபையில் நான் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினேன்.  

ஊவா மாகாண சபையில், எமது சமூகத்துக்கென இருந்துவந்த மாகாண தமிழ்க்கல்வி அமைச்சை, எமது சமூகத்தின் துரோகிகள் சிலரை வைத்து அன்றைய அரசு இல்லாமல் செய்துவிட்டது. அதனை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவ்வமைச்சை இனி எவராலும் இல்லாமல் செய்துவிட முடியாதளவில் உத்தரவாதப்படுத்தி பெற்றுகொள்ள வேண்டிய நிலைபாட்டிலிருந்தேன்.

அதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற்றது. அரச வர்த்தமானியின் ஊடாக உத்தரவாதப்படுத்தப்பட்ட பின்பு, தமிழ்க்கல்வி அமைச்சை நான் பெற்றுக்கொண்டேன். தற்போது அவ்வமைச்சு சுதந்திரமாக, அனைத்து அதிகாரங்களுடன் கூடியதாகவும் அமைந்திருப்பது, எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது.

'ஊவா மாகாண சபையை இனி யார் ஆட்சி செய்தாலும், ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சை இல்லாமல் செய்துவிட முடியாது' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .