2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் 8 பேர் காயம்

Kogilavani   / 2015 ஜூலை 23 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ. மு.இராமச்சந்திரன்

கொழும்பு-ஹட்டன் பிரதான வீதி, செனனில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற பவுசரும் ஹட்டனிலிருந்து வெளிஓயா நோக்கி  பயணிகளை ஏற்றிசென்ற தனியார் பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பஸ்ஸின், சாரதி பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 8 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .