Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 24 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
குருவிட்ட நகரில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையத்தின் உள்ளே பெரும்பாலான பிச்சைகாரர் குடியிருப்பதால் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பஸ் தரிப்பு நிலையத்தின் உள்ளே பிச்சைக்காரர் தமது உடுப்புகள், கோப்பைகள் மற்றும் குப்பைகள் என்பவற்றை வைத்துக்கொண்டு பஸ் தரிப்பு நிலையத்தை நாசப்படுத்துவதாலும் துர்நாற்றம் வீசுவதாலும் பஸ் தரிப்பு நிலையத்தின் உள்ளே பயணிகளுக்கு இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, தற்போது மழை பெய்து வருவதால் மேற்படி பஸ் தரிப்பு நிலையத்தின் உள்ளே பயணிகள் அமர்ந்திருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago