2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மலையக தலைவர்களின் வெற்றிக்கு வழிசமைக்க வேண்டும்: சரஸ்வதி

Kogilavani   / 2015 ஜூலை 24 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக தலைவர்களான திகாம்ரபரம், இரதாகிருஷ்ணன் ஆகியோரின் வெற்றிக்கு வழிசமைக்க வேண்டுமென மத்திய மாகாண சபை உறுப்பினர் திருமதி சரஸ்வதி சிவகுரு தெரிவிதிதார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் புஸ்ஸல்லாவையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மலையக தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, ஜனவரி 8ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்து புதிய ஆட்சிக்கு வழிவகுத்தீர்களோ, அதே போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் செயற்பட்டு மலையக தலைவர்களை வெற்றியடைச்செய்ய வேண்டுமென்று அவர் மேலும் கூறினார்.

தன்மான சிந்தனையுடன், மலையகத்தை அடமானம் வைக்காமல் மலையக எழுச்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்' என்றும் அவர் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .