2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐ.ம.சு.கூ இன் சேவைகளை மறக்க முடியாது: இ.தொ.கா

Kogilavani   / 2015 ஜூலை 25 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

'ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கமே தமிழ் மக்களுக்கு அதிகளவான சேவையை செய்துள்ளது. இதை இல்லை என்று கூற முடியாது' என சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளருமான கணபதி இராமச்சந்திரன் தெரிவித்தார்.

இரத்தினபுரி பெல்மதுளை தேர்தல் தொகுதியில் நேற்று(24) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இ.தொ.கா பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமையவே இ.தொ.கா. இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில், இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்தது. இதை தவறாக எண்ணக்கூடாது' என்றார்.

'இன்று மலையக மக்கள் பெரும்பாலானோர் இ.தொ.கா மீதே நம்பிக்கை வைத்துள்ளனர்.  யாறுக்கும் தலைகுனியாமல் மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதில் இ.தொ.கா. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் முன்னின்று உழைத்து வருகின்றார்.

மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுக்க கூடிய சக்தி இ.தொ.காவுக்கு மட்டுமே உள்ளது. இ.தொ.காவை தவிர ஏனைய மலையக தொழிற்சங்கங்கள், மலையக மக்களுக்கு அரைகுறையான சேவைகளை செய்துள்ளதை தற்போது மக்கள் நன்கு உனர்ந்துள்ளார்கள்.

கடந்த சில மாதங்களாக மௌனமாக செயல்பட்ட இ.தொ.கா, எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்பு அதன் முழுமையான பலத்தை பெற்று மலையக மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுகொடுக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் கடந்த மாகாண சபை தேர்தலின்போது இ.தொ.கா.சார்பாக இரண்டு பிரதிநிதிகளை மாகாண சபைக்கு அனுப்ப முடிந்தது.

'எனவே நாடாளுமன்றத்தில் இரத்தினபுரி மாவட்ட தமிழனின் குரல் ஒலிக்க செய்ய ஒன்றினைவோம்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .