2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பணத்தை கையாடிய குற்றச்சாட்டில் முகாமையாளருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 ஜூலை 26 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.இ.பெருமாள்

பணமோசடி குற்றச்சாட்டில் கைதான அரச வங்கியின் மஸ்கெலியா கிளை முகாமையாளரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான், சனிக்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார்.

வாடிக்கையார்களின் காசோலை மற்றும் வங்கியில் மேலதிக பற்று வழங்கப்படுவதாக கூறி, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து பெருந்தொகையான பணத்தை கையாடியுள்ளதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்படி நபர் அவரது இல்லத்தில் வைத்து சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .