2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பிரசாரத்துக்கு சென்றவர்கள் மலசலக்குழிக்குள் விழுந்து காயம்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்களில் ஐந்து பேர், மலசலக்குழிக்குள் விழுந்து காயமடைந்த சம்பவம் இன்று மாலை  கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது.

இ.தொ.கா.வின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று, கொட்டகலையில் அமைந்துள்ள இ.தொ.கா.வின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்பு உணவு உண்பதற்காக சென்ற சிலர், அங்கு மூடிய நிலையில் காணப்பட்ட மலசலக்குழியின் மீது  பயணித்துள்ளனர்.

இதன்போது குழி உடைந்ததால், அதன்மீது பயணித்த ஐவரும் குழிக்குள் விழுந்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் இவர்களை உடனடியாக மீட்டு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சையின் பின்பு மேற்படி ஐவரும் வீடுதிரும்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .