2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கல்வியலாளர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

'மலையகத்தில் மாற்றம் வேண்டுமெனில் கல்வியலாளர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு மக்களின் வாக்குகள் பயன்படுத்தப்பட வேண்டும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பி.இராஜதுரை தெரிவித்தார்.

'மகா மன்னனாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை 24 மணித்தியாளங்களில் சாதாரண மனிதனாக்கி வீட்டுக்கு அனுப்பியதில் நுவரெலியா மாவட்ட வாக்காளர்களின் வாக்குகள் பாரிய தாக்கம் செலுத்தின. அவ்வாறான பலமிக்க வாக்குகளானது, இம்முறை கல்வியியலாளர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

காசல்ரீயில் திங்கட்கிழமை இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான  சம்பள பேச்சுவார்த்தையின் போது, 850 ரூபாய் சம்பளம் வழங்க தோட்ட கம்பனிகள் இணக்கப்பாட்டுக்கு வந்த போதிலும் ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்தால் அது இழுபறி நிலைக்கு தள்ளப்பட்டது.

நாடாளுமன்றத்துக்கு மக்களின் பிரச்சினைகளை கொண்டு செல்ல கல்விமான்களை அனுப்பவேண்டியது தார்மீக கடமை. நுவரெலியா மாவட்ட மக்களிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின்போது, கல்வியியலாளர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என 50 வீத மக்கள் விரும்பியதாக தெரியவந்துள்ளது. எனவே, நுவரெலியா மாவட்ட மக்கள் சிந்தித்து வாக்களித்து, சிறந்தவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்' என அவர் கோரினார்.

'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பது உறுதி. நுவரெலியா மாவட்டத்தில் 5 அல்லது 6 ஆசனங்களை ஐ.தே.க. பெறும்.  நாட்டில் நல்லாட்சி ஏற்பட வேண்டும். அவ்வாறே மலையகத்திலும் நல்லாட்சி வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தப்பின் கல்வி, வீடமைப்பு, காணியுரிமை, தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .