2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

300 வாக்காளர் அட்டைகள் தபால் நிலையத்தில் தேங்கி கிடக்கிறது

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

விநியோகிக்கப்படாத நிலையில் 300 வாக்காளர்களின் வாக்காளர் அட்டைகள் தலவாக்கலை தபால் நிலையத்தில்  காணப்படுவதாகவும் உரியவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து  வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறும் நிலைய அதிகாரி  ஜெயவிக்ரம தெரிவித்தார்.

தலவாக்கலையில்   23,552 வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.  இவர்களில்  300 பேரின் வாக்களார் அட்டைகளே இவ்வாறு தேங்கி கிடப்பதாக அவர்  கூறினார்.

தபால் நிலைய ஊழியர்கள், வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கச் சென்றபோது உரியவர்கள் வீடுகளில் இல்லாததால்  இவ்வட்டைகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் எனவே, வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து வாக்காளர் அட்டைகளை பெற்றுகொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .