2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி 7பேர் பாதிப்பு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட், சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்டத்தில்  இன்று (13) காலை 11 மணியளவில் தேயிலை தோட்டத்தில்  வேலை செய்துக்கொண்டிருந்த 7பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் இருந்த புற்களை வெட்டி அகற்றிக் கொண்டிருந்த போது, தேயிலைச்செடிக்கு அடிப்பகுதியிலிருந்த குளவி கூடு கலைந்து வந்து தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான 7 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

குளவி தாக்குதலுக்கு இழக்கானவர்களில் 7 பேரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தெரியவந்துள்ளது.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .