Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்ட பிரஜைகள் முன்னணியின் அமைப்பாளர் கிருஷ்ணராஜா உட்பட அதன் அங்கத்தவர்கள் 1400 பேர், தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதுடன் இவர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் நுவரெலியா மாவட்ட பிரஜைகள் முன்னணியின் அமைப்பளார் கிருஷ்ணராஜா தெரிவித்துள்ளதாவது,
'நான் நுவரெலியா மாவட்டத்தின் பிரஜைகள் முன்னணியின் அமைப்பாளராக கடமையாற்றி வந்தேன். தற்போது முன்னணியின் செயற்பாடுகள் ஒத்துப்போகாத காரணத்தாலும் தேர்தல் என்ற போர்வையில் மலையக பெண்களை கேவலப்படுத்தும் விதமாக உலக நாடுகளுக்கே எடுத்து காட்டிகொண்டிருக்கின்றார்கள். எனவே இந்தச் செயல் எனக்கு மட்டுமல்ல, பிரஜைகள் முன்னணியின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் பிடிக்காத காரணத்தினால் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டடோம்.
நான் ஊடகவியலாளராகவும் இருந்தேன். பிரஜைகள் முன்னணியின் செயளாலர், சிபாரிசு செய்து அதனை பெற்றுக்கொடுத்தார். அதையும் தூக்கி எறிந்துவிட்டு தற்போது தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்துவிட்டேன். என்னோடு பிரஜைகள் முன்னணியின் அங்கத்தினர் 1400 அடங்களாக ஆதரவாளர்கள் உட்பட 1500க்கு மேற்பட்டோர்; இணைந்துள்ளனர்.
மலையக பெண்களான தோட்டத் தொழிலாளர்களை பிரஜைகள் முன்னணியின் தொலைக்காட்சியில் இவ்வாறு கேவலப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இச்செயற்பாடு எனக்கு மட்டுமல்ல. மலையகத்தில் அனைவருக்கும் கடுகளவேனும் விருப்பமில்லை. எனவே இப்படியாக மலையக பெண்களை கொச்சைப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமானதாக இல்லை என கூறிக்கொள்வதோடு நுவரெலியா ஒலிபன்ட் தோட்ட மக்களும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்துள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
21 Jun 2025