Kogilavani / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு, அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அக்குறணைப் பிரதேசத்தில் இன்று (29) மேலும் 10 தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், இப்பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்வடைந்துள்ளது.
எனவே, அக்குறணை பிரதேசத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் மேலும் உள்ளதால் அனைவரும் தம்மை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
எதிர்வரும் 14 நாட்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியேராமல், வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறுக் கேட்டுக்கொண்டுள்ள பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள், ஏதேனும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டி வந்தால் கிராமங்களில் நியமிக்கப்பட்டுள்ள தொண்டர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago