Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 01 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் சேவையில் இயங்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளின் நடத்துநர்கள், பயணிகளிடம் அதிகக் கட்டணத்தை வசூலிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேற்படி மாவட்டத்தில் இரத்தினபுரி, காவத்தை, இறக்குவாணை, பலாங்கொடை, எஹலியகொடை, குருவிட்ட, கொலன்ன, எம்பிலிப்பிட்டிய, பெல்மதுளை, களவான நிவித்திகல, கொடக்கவெல ஆகிய நகர பகுதிகளில் சேவையில் இயங்கும் பஸ் வண்டிகள் மற்றும் அதரன அண்மித்த தோட்டப்பகுதி மற்றும் கிராமப் பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தனியார் மற்றும் இ.போ.ச பஸ் வண்டிகளில் குறிப்பிட்ட தொகையைவிட, கூடுதலான தொகையைப் பெற்று வருவதாகவும் மற்றும் மிகுதி பணம், பற்றுச்சீட்டு என்பன வழங்கப்படுவதில்லை என்றும் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே பொதுமக்களின் பணத்தை சூரையாடும் பஸ் வண்டிகளின் நடத்துநர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025