2024 மே 03, வெள்ளிக்கிழமை

அன்னதானம் உண்ட 120 பேர் வைத்தியசாலை அனுமதி

Janu   / 2024 ஏப்ரல் 08 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதண்ணி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான , வாலமலே பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி  ஆலய வருடாந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம்  ஒவ்வாமை ஏற்ப்பட்ட  காரணத்தால்  சுமார் 120 பேர் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (07) பதிவாகியுள்ளது .

தோட்ட  தொழிலாளர்களான ஆண் , பெண்கள்  மற்றும்  சிறு பிள்ளைகள் இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

ஆலயத்தில் வழங்கப்பட்ட  அன்னதான உணவை  உண்ட பின்னர்  பிற்பகல் 06.00 மணியளவில் வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளதையடுத்து  அவர்களை  உடனடியாக மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது .

அவர்களின்  பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதுடன் இன்னும் 40 பேர் மாத்திரமே  சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியர்கள்  தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .