Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
ஏறாவூரிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு, அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி, இன்று (06) விபத்துக்குள்ளானதில், சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில், ரதெல்ல குறுக்கு பாதையில் வைத்தே, குறித்த லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவித்த நானு-ஓயா பொலிஸார், லொறியிலிருந்த 400 அரிசி மூடைகளை, பிரதேச மக்களின் உதவியுடன், மற்றொரு லொறியில் ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தனர்.


23 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
06 Apr 2026