Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை பிரதேசத்தில், மாணவிகள் இருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் இருவருக்குப் பிணை வழங்க வேண்டாம் எனக் கோரி, பிரதேச மக்கள், மொனராகலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில், இன்று (07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பிரிவில் கல்வி கற்றுவரும் மாணவிகள் இருவரை, வன்புணர்வுக்கு உட்படுத்தியமை, குறித்த மாணவிகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரும், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை, பொலிஸார் நீதிமன்றத்துக்கு அழைத்துவரும் போதே, பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, அவ்விரு ஆசிரியர்களும், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட, நீதவான் உத்தரவிட்டார்.
33 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago