2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்வில் பகுதியின் நீர்தேக்க கரையோரத்திலிருந்து, ஆணின் சடலத்தை இன்றுக் காலை மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய முத்துராஜா சந்திரசேகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீர்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்தே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X