2025 ஜூலை 23, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை- மஹியங்கனை வீதி, கய்லகொட பகுதியிலுள்ள ஹொட்டலொன்றின் உரிமையாளரான அஜித் தேஷப்பிரிய விக்ரமரத்ன என்பவரின் (வயது 74) சடலத்தை, பதுளை பொலிஸார், நேற்றுக் காலை மீட்டுள்ளனர்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர், மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வழமைப்போன்று, செவ்வாய்க்கிழமை இரவு ஹோட்டலை மூடிவிட்டுச் சென்ற இவர், அடுத்த நாள் காலை சடலமாகக் கிடந்ததாக, ஹோட்டலில் பணியாற்றிவரும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளர்.

பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .