2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, ஜும்மாப் பள்ளிவாசலில்  அமைக்கப்பட்டு வரும் மினாராப் பகுதியை உடனடியாக அகற்றுமாறு வலியுறுத்தி, குறித்த பள்ளிவாசலுக்கு முன்னால் 'சிங்களே' இயக்கத்தினர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிவாசலுக்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மினாராப் பகுதிக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்துவதாக உத்தரவாதம் அளிக்கும் வரை, தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக கோஷம் எழுப்பினர்.

இவ்வார்ப்பாட்டம்  காரணமாக, கண்டி நகரின் சில வீதிகள் மூடப்பட்டிருந்ததால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .