2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இரத்தினபுரியில் 50 சதவீதமான மாணவர்கள் போதைக்கு அடிமை

Ilango Bharathy   / 2021 ஜூலை 23 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்ட கல்வி நிலையங்களில், கல்வி கற்கும் மாணவர்களில் 50 சதவீதமானவர்கள், போதைக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதென, இரத்தினபுரி மாவட்டத்தின் புத்திஜீவிகள் அமைப்பின் செயலாளர் கே. தியாகேஸ்வரன் தெரிவித்தார்.

எனவே, பிள்ளைகளுக்கு சமயக் கல்விக்கும் முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் அப்போதே அவர்களை போதைப் பொருளிலிருந்து மீட்டெடுக்கலாம் என அவர் தெரிவித்தார்.

மேலதிக வகுப்புக்களுக்காகச் செல்லும் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகும் சூழ்நிலை
அதிகமாக உள்ளதால் இவ்விடயத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் அதிக கவனம் செலுத்த
வேண்டும் என்றார்.

ஞாயிற்றுக் கிழமைகளில், அறநெறி வகுப்புக்களுக்கு மாணவர்களை தவறாது அனுப்பி வைத்தல் வேண்டும் என்றும், இத் தினங்களில் மாணவர்களை வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X