2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

இராஜாங்க அமைச்சருக்கு பாராட்டு விழா

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் ஏற்பாட்டில், கல்வி அமைச்சர் இராஜாங்க அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஷ்ணனுக்கு நடத்தப்படும் பாராட்டு நிகழ்வு, கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில், எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், இலண்டன் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டமைக்காகவும், அரசியலில் 30 வருடகால சேவையாற்றியமைக்குக் கௌரவம் அளிக்கும் வகையிலும், இந்தப் பாராட்டு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் துணைத்தலைவர் தே.செந்தில்வேலவர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக அமைச்சர் மனோ கணேசன் மற்றும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேசக் கிளைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஜேர்மன் நாட்டுக் கிளை தலைவர் இ.இராஜசூரிய ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் சிறப்பு அதிதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .