2025 மே 12, திங்கட்கிழமை

இரு வாகனங்களுடன் கார் மோதி விபத்து : ஒருவர் காயம்

Freelancer   / 2023 ஜூலை 23 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு செ.திவாகரன்,பி.கேதீஸ்

நானுஓயா பொலிஸ் பிரிவிலுள்ள  நுவரெலியா -தலவாக்கலை பிரதான வீதியில் சனிக்கிழமை(22) கார் ஒன்று லொறி மற்றும் முச்சக்கரவண்டியுடன் ​மோதி வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்று நானுஓயா  பிரதான நகரில்  வீதியிலுள்ள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும்  முச்சக்கர வண்டி என்பவற்றுடன் மோதியுள்ளது. மேலும் குறித்த லொறியில் அமர்ந்திருந்த சிறுவன் ஒருவர் சிறிய காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X