Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 மார்ச் 09 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி சந்ரு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெஸ்போட் பிரதேசத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரை எடுத்துச் செல்லும் ஆற்றில் நீராட சென்று காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயா டெஸ்போட் மேல் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மகேந்திரன் சதிஸ்குமார் என்ற இளைஞரே இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் சிறிய முரண்பாடு காரணமாக நானுஓயாவில் கிலாரண்டன் பகுதியில் தனது உறவினர் வீட்டில் ஐந்து நாட்களுக்கு மேலாக தங்கி இருந்த நிலையிலேயே நீராட சென்றுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
2 hours ago