2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உதவி வழங்கும் நிகழ்வு

Sudharshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெறுவோருக்கு மேலதிக   உதவிகளை வழங்கும் நிகழ்வு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில் கண்டி மலையக கலை கலாசார மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (13)  நடைபெறவுள்ளது.

இதில், 'திரிய பியச' வீடுகளைப் பெற்ற 135 பேருக்கு காசோலைகள் வழங்கப்படவுள்ளதுடன், 30 பேருக்கு கடன் உதவிகளும் வழங்கப்படவுள்ளன.

மேலும், அதிர்ஷ்ட சீட்டிழுப்பின் மூலம் வெற்றி பெற்ற 16 பேருக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் சிறந்த சேவைகளையாற்றிய சமுர்த்தி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதென கண்டி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .