Janu / 2023 ஜூலை 16 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் மலைத்தோட்டத்தில் பெண்ணொருவர் சனிக்கிழமை (15) தன் உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயான 30 வயதுடைய பெண்ணொருவரே . குடும்ப பிரச்சினை காரணமாக இவ்வாறு செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சடலம் மரண பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (16) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .