Yuganthini / 2017 ஜூன் 14 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
உடல்நலக் குறைவு காரணமாக, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிராந்திய ஊடகவியலாளரான இராமநாதன் வல்லரசன், சிகிச்சைப் பலனின்றி, தனது 55ஆவது வயதில், செவ்வாய்க்கிழமை இரவு மரணமடைந்துள்ளார்.
பசறையைச் சேர்ந்த இவர், கடந்த 20 வருடங்களாக ஊடகத்துறையில் சேவையாற்றி வந்ததோடு, ஊவா தமிழ் ஊடகவியலாளர்கள் 'யுனிமீடியா' அமைப்பின் பொருளாளராகவும் செயற்பட்டு வந்தார்.
அவரது இறுதிக் கிரியைகள், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் டெமேரியா தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, தோட்ட பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .